புதன், 4 ஏப்ரல், 2018

வைகோ வெளிப்படையான தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று நினைத்து வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கொண்டு திரிகிறார் சீமான்.பிரபாகரன் அவரோடு ஐந்து நிமிடம் கூட ஒதுக்கவில்லை என்பதே உண்மை. தலைவர் பெயரை சொல்லி அரசியல் செய்வது வருத்தத்திற்குரியது. பிரபாகரன் பெயரை கலங்க படுத்தாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். வீட்டிற்கு ஒருவர் ஸ்டெர்லைட் ஆலையை மூட போராட்ட களத்திற்கு வர வேண்டும். தம்பி ரவி அவர்கள் நாளைய நம் தலைமுறை உயிர்ககளை காப்பாற்ற இன்று தனது உயிரைக் கொடுத்துள்ளார்.போராட்டத்தை வீரியப்படுத்த, துரிதப்படுத்த அனைத்து இளைஞர்களும் ஸ்டெர்லைட் ஆவைகமுன்பாக திரண்டு வருமாறு அழைப்பு விடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஸ்டெர்லைட் நச்சு ஆலை மனித உயிர்களை காவு கொடுத்த மக்களின் வாழ்க்கையை விழுங்கி விட்டது. நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டார்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக